மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!!!

நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டா...


நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்பதால் தான். ஆனால் இப்படி மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், இக்காலங்களில் உடலுறவில் ஈடுபட்டால், அவை சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்திவிடும். அதிலும் உங்கள் துணை சுத்தமாக இல்லாவிட்டால், பாலியல் நோய்களான பிறப்புறுப்பு படர்தாமரை மற்றும் மேக வெட்டை நோய் போன்றவை வரக்கூடும். எனவே எப்போது உடலுறவில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்னரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

அதிலும் மாதவிடாய் முடிந்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு அதிக அளவில் சோர்வு இருப்பதுடன், இக்காலத்தில் தான் விரைவில் நோய்த்தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் மாதவிடாயின் இறுதி நாளில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாவானது, துணையில் விந்தணுவுடன் சேர்வதால், அவை நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இங்கு மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால் சந்திக்கக்கூடிய விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். அதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் தான் காரணம். எனவே மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடாமல், 2-3 நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடுவது நல்லது.

மற்றொரு முக்கியமான விளைவு, மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபட்டால், பால்வினை நோய்களான பிறப்புறுப்பு படர்தாமரை மற்றும் மருக்கள் போன்றவை தொற்றும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், மாதவிடாய்க்கு 2 நாட்கள் கழித்து ஈடுபடுவதுடன், எப்போதும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டும்.

நிபுணர்களின் கருத்துப்படி மாதவிடாய் காலத்திற்கு முன்போ அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கவே முடியாது. எனவே கருத்தரிக்க நினைப்பவர்கள், இக்காலத்தில் முயற்சிப்பது வீண். வேண்டுமானால் மாதவிடாய் முடிந்து இரண்டு வாரம் கழித்து முயற்சித்தால், கருத்தரிக்கலாம்.

மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபட்டால், அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தம் வெளியேறியிருப்பதால், அப்போது அதிகமாக உடலியக்கம் ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான சோர்வை ஏற்படுத்தும்.

மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாய் காலத்தில் வித்தியாசமான உணர்ச்சிகள், குழப்பமான மனநிலை மற்றும் அதிகமான வயிற்று வலி போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், சில நேரங்களில் அவை மாதவிடாய் சுழற்சியை பாதித்து, உடலை பெருமளவில் பாதிக்கும். எனவே இக்காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.

Related

sex 6536866194475947592

Post a Comment

emo-but-icon

Follow Us

Hot in week

Recent

Comments

Side Ads

Text Widget

Connect Us

item